வலையில் சிக்கிய அபூர்வ மீன்! ஒரே இரவில் லட்சாதிபதியான மீனவர்! எப்படி தெரியுமா?
இந்தியாவில் மீனவர் ஒருவர் ஒரே மீனை பிடித்து பல லட்ச ரூபாய் வரை சம்பாதித்துள்ள நிகழ்வு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் ஜீவா. இவர் மீன் பிடித்தல் தொழிலை செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் கடலுக்கு சென்றுள்ளார். மீன் பிடிக்க வலை வீசியவருக்கு சில நிமிடங்களில் பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது.
வலையை விரித்திவிட்டு மீனை பார்த்தவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. காரணம் அந்த மீன் யாருக்கும் அவ்வளவு எளிதாக வலையில் சிக்காது. அந்த மீன் 25 கிலோ எடை இருந்துள்ளது. மீனை அப்படியே கூறு போட்டு விற்பனை செய்தால் கிலோ 700 ரூபாய் வரை மட்டுமே செல்லும்.
ஆனால் அவரோ அதை ஏலம் விட்டுள்ளார். ஏனென்றால் சிங்கப்பூர், மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் பல்வேறு மருந்துகள், வாசனை திரவியங்கள், தைலங்கள் தயாரிக்க இதன் அடிவயிற்றில் உள்ள திரவம் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் இதை ஏலம் எடுக்க பலர் ஆர்வம் காட்டி உள்ளனர். இந்நிலையில் இந்த ஒரு மீன் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது.
சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் விதமாக ஒருவர் இந்த மீனை 2.30 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார். இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகின்றது.