வலையில் சிக்கிய அதிசிய மீன்! ஒரே நாளில் பல லட்சங்களை அள்ளி சென்ற மீனவர்
இந்தியாவில் மீனவர் ஒருவர் கடலில் வீசிய வலையில் ராட்சத சுறா சிக்கியதால் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியை சேர்ந்தவர் மெல்பின். இவர் தன்னுடைய படகில் சில மீனவ நண்பர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது மெல்பின் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென வலையில் ராட்சத சுறா ஒன்று சிக்கியுள்ளது. வலையில் சிக்கியது ராட்சத சுறா என்பதால் பைபர் படகில் ஏற்றி கடலுக்குள் கொண்டு வர முடியாது என்பதால் வலையோடு இழுத்தபடியே மீனவர்கள் துறைமுகம் வந்து சேர்ந்துள்ளனர்.
கரைக்கு வந்த சுறா மீன் சுமார் 10 அடி நீளமும், 2 டன் எடையும் கொண்ட அரிய வகை உடும்பு சுறா என்பது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த மீனை வியப்புடன் பார்த்து சென்றனர்.
இந்நிலையில் அந்த ராட்சத சுறா சுமார் 1 லட்சம் ரூபாய் வரை விலை போனதால் சக மீனவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். பைபர் படகில் மீன் பிடித்து சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்த மெல்பின், தற்போது ஒரே நாளில் 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.