நாட்டு மக்களுக்கு பிரான்ஸ் அளிக்கவிருக்கும் ரகசிய கையேட்டில் உறையவைக்கும் 5 குறிப்புகள்
மூன்றாம் உலகப் போர் அபாயம் அதிகரித்துவரும் நிலையில், எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்த எச்சரிக்கை கையேட்டை பிரெஞ்சு பொதுமக்கள் பெற உள்ளனர்.
ஐந்து முக்கிய குறிப்புகள்
மொத்தம் 20 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டில் 63 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுத மோதல்கள், அணுசக்தி கசிவு மற்றும் இயற்கை பேரழிவுகள் உட்பட பல திகிலூட்டும் சூழ்நிலைகளில் தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது குறித்து பிரெஞ்சு பொதுமக்களுக்கு அதில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த கோடையில் கையேட்டின் சாத்தியமான வெளியீட்டிற்கு முன்னதாக ஐந்து முக்கிய குறிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக ஆறு லிற்றர் குடிநீர், அடிப்படை மருத்துவப் பொருட்கள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, பேற்றரிகள் மற்றும் சில பயங்கரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் ஒரு டார்ச் ஆகியவற்றைக் கொண்ட survival kit ஒன்றை தயார் நிலையில் வைக்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
அடுத்ததாக பிரெஞ்சு மக்கள் உடனடித் தாக்குதல் ஏற்பட்டால் எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விளக்கப்பட்டுள்ளது. அதில், உள்ளூர் தற்காப்புக் குழுக்கள் மற்றும் தீயணைப்புக் குழுக்களில் அவர்கள் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது.
புடினின் அணுகுமுறை
மேலும், ஒரு அணு ஆயுத சம்பவம் ஏற்பட்டால், தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு சமூக ஊடகத்தில் மக்கள் கடுமையாக கேலி செய்து வருகின்றனர்.
மட்டுமின்றி, அவசர உதவிக்கான தொலைபேசி இலக்கங்களையும் பட்டியலிடக் கோரியுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வரும் நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் எதுவும் புடினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அணுகுமுறை உள்ளிட்ட காரணங்களால் பிரான்ஸ் நிர்வாகம் மக்களை தயார் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இருப்பினும், உக்ரைன் மற்றும் ரஷ்யா தொடர்பான நெருக்கடிகளுக்கும் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கும் தொடர்பில்லை என்றே பிரான்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
பிரான்சின் இந்த நடவடிக்கை உலகிலேயே முதல் முறை அல்ல, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் ஏற்கனவே தங்கள் சொந்த பதிப்புகளை வெளியிட்டுள்ளன. ஸ்வீடன் போர் நெருக்கடி வந்தால் என்ற தலைப்பில் ஒரு 32 பக்க கையேட்டை தயாரித்து மொத்தம் ஐந்து மில்லியன் எண்ணிக்கையில் விநியோகித்துள்ளது.
இதற்கிடையில், பல பேரழிவுகளுக்கு மக்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை விளக்கும் ஒரு அரசாங்க வலைத்தளத்தை பின்லாந்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |