இந்திய வம்சாவளியினர் நான்கு பேருக்கு பிரித்தானியாவில் 122 ஆண்டுகள் சிறை: விவரம் செய்திக்குள்
இந்திய வம்சாவளி இளைஞர்கள் நான்கு பேருக்கு பிரித்தானியாவில் 122 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இளைஞருக்கு ஏற்பட்ட துயர முடிவு
மேற்கு இங்கிலாந்திலுள்ள Shrewsbury என்னுமிடத்தில், கடந்த ஆண்டு, ஆகத்து மாதம் 21ஆம் திகதி, ஆர்மான் சிங் (Aurman Singh, 23) என்னும் பார்சல் டெலிவரி செய்யும் இளைஞரை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று, அவரை கத்தி, கட்டை முதலான பல ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளது. இரத்த வெள்ளத்தில் அவரை அந்த கும்பல் விட்டுச் செல்ல, சிறிது நேரத்தில், அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியானார் அவர்.
West Mercia Police / SWNS
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வம்சாவளியினரான அர்ஷ்தீப் சிங் (24), ஜக்தீப் சிங் (22), ஷிவ்தீப் சிங் (26) மற்றும் மன்ஜோத் சிங் (24) என்னும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், எங்கு சென்றால் ஆர்மான் சிங்கை பிடிக்கலாம் என ஆலோசனை கொடுத்த ஷுக்மன்தீப் சிங் (23) என்பவரையும் பொலிசார் கைது செய்தார்கள்.
West Mercia Police / SWNS
122 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நன்கு திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட கொடூரமான குற்றச்செயல் என்று கூறியுள்ள நீதிபதியான Kristina Montgomery, அர்ஷ்தீப் சிங், ஜக்தீப் சிங், ஷிவ்தீப் சிங் மற்றும் மன்ஜோத் சிங் ஆகிய நான்குபேருக்கும் மொத்தமாக 122 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
ஆர்மான் சிங் பயணிக்கும் பாதை குறித்த விடயங்களை, அவரை கொலை செய்யத் திட்டமிட்ட நால்வருக்கும் தெரியப்படுத்திய ஷுக்மன்தீப் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |