லண்டனில் திருமணத்திற்கு பின்னர் கணவரின் பாலினம் குறித்து தெரிந்து அதிர்ந்த பெண்: பின்னர் நடந்த கொடூரம்

London Pakistan Marriage
By Arbin Jul 14, 2023 11:35 PM GMT
Report

லண்டனில் பாகிஸ்தானிய பெண் ஒருவர் திருமணத்திற்கு பின்னர் தமது கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் என அறிந்து அதிர்ந்து போன நிலையில், குறித்த பெண்ணை கொடூர சித்திரவதைக்கு உட்படுத்திய மொத்த குடும்பத்திற்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கணவர் தன்பாலின ஈர்ப்பாளர்

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் தற்போது 28 வயதாகும் Shuaib Arshid என்பவருக்கும் 2016ல் குடும்பத்தினர் ஒப்புதலுடன் பாகிஸ்தானில் வைத்து திருமணம் நடந்துள்ளது.

லண்டனில் திருமணத்திற்கு பின்னர் கணவரின் பாலினம் குறித்து தெரிந்து அதிர்ந்த பெண்: பின்னர் நடந்த கொடூரம் | Flawed Marriage Cruel West London Family Jailed Image: MPS

ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தமது கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் எனவும், தனது பெற்றோரிடம் இருந்து அதை மறைத்து வந்துள்ளார் எனவும் தொடர்புடைய பெண் தெரிந்து கொண்டு அதிர்ந்து போயுள்ளார்.

அதன் பின்னர் கணவராலையே கிழக்கு லண்டனில் பெற்றோரின் குடியிருப்பில் 17 மாதங்கள் சிறை வைக்கப்பட்டு, கொடூர சித்திரவதை அனுபவித்துள்ளார். ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் வாகனத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை குடித்துவிட, இறுதி கட்டத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

18 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், Shuaib Arshid என்பவரின் பெற்றோர், சகோதரர் அகீல் அர்ஷித், சகோதரி Zaib ஆகியோருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் திருமணத்திற்கு பின்னர் கணவரின் பாலினம் குறித்து தெரிந்து அதிர்ந்த பெண்: பின்னர் நடந்த கொடூரம் | Flawed Marriage Cruel West London Family Jailed Image: MPS

2016ல் Shuaib Arshid என்பவருக்கு 22 வயதாக இருக்கும் போது பெற்றோர்கள் ஒப்புதலுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2017 அக்டோபர் மாதம் Mallard Way பகுதியில் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளனர்.

ஆனால் தமது கணவன் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்து கொண்ட பின்னர், குடும்பத்தினரிடம் இருந்து கடும் சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். மேலும், Arshid Sadiq தமது மருமகளை கொடூரமாக நடத்தியுள்ளார். கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிய அவர், அலைபேசியையும் பறித்துள்ளார்.

நான்கு ஆண்களுடன் உடல் ரீதியான தொடர்பு

குடியிருப்பில் இருந்து வெளியே செல்லவும் அனுமதி மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் இயந்திர எண்ணெய் குடித்துவிட, மருத்துவ உதவிக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றே குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

லண்டனில் திருமணத்திற்கு பின்னர் கணவரின் பாலினம் குறித்து தெரிந்து அதிர்ந்த பெண்: பின்னர் நடந்த கொடூரம் | Flawed Marriage Cruel West London Family Jailed Image: MPS

திருமணத்திற்கு பின்னரும் Shuaib Arshid நான்கு ஆண்களுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 2019 ஏப்ரல் மாதம் தொடர்புடைய பெண் Shuaib Arshid பிடியில் இருந்து தப்பிக்கும் வரையில், கடும் சித்திரவதை அனுபவித்துள்ளது நீதிமன்ற விசாரணையில் அம்பலமானது.

இந்த வழக்கில், Shuaib Arshid என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US