சுவிஸ் மாகாணம் ஒன்றிற்கு பெருவெள்ள எச்சரிக்கை...
சுவிட்சர்லாந்தில், ஜெனீவா மாகாணத்துக்கு பெருவெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரைபுரண்டோடும் நதி
குறிப்பாக, ஜெனீவாவில் Arve நதியோரம் வாழ்பவர்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த நதி பெருக்கெடுத்து ஓடுவதால் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பாலங்கள் மூடப்பட்டுள்ளன, நதியோர நடைபாதைகளில் பெருவெள்ளம் ஓடுவதால், நதிக்கரையோரமாகக் கூட செல்லவேண்டாம் என மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
மாகாண தீயணைப்புத்துறை, நதி, விநாடிக்கு 1000 கியூபிக்மீற்றர் அளவுக்கு கரைபுரண்டு ஓடுவதாக தெரிவித்துள்ளது. இது மிக பிரமாண்டமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |