இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும்... டிரம்ப் வீட்டில் FBI சோதனையின் பகீர் பின்னணி
*வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை மார்-ஏ-லாகோ இல்லத்திற்கு கொண்டு சென்றாரா டிரம்ப்
*ஜனாதிபதி ஜோ பைடன் இந்த FBI சோதனை விவகாரத்தில் எந்த முன் அனுமதியும் வழங்கவில்லை
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வீட்டில் அணு ஆயுதங்கள் தொடர்பான ஆவணங்களை FBI அதிகாரிகள் தேடியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆவணங்களை FBI அதிகாரிகள் கைப்பற்றினார்களா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் FBI அதிகாரிகள் சோதனையிடுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
@AFP
ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை வெளியேற்றி புளோரிடாவில் அமைந்துள்ள தமது மார்-ஏ-லாகோ சொகுசு இல்லத்திற்கு கொண்டு சென்றாரா என்பது தொடர்பிலான விசாரணையின் ஒருபகுதியாக FBI அதிகாரிகள் சோதனை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் டொனால்டு டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தியபோது அணு ஆயுதங்கள் தொடர்பான ஆவணங்களைத் தேடிக்கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
@AFP
மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு உரிய உயர்மட்ட அதிகாரிகளின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றே தெரிய வந்துள்ளது. ஆனால் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என டொனால்டு டிரம்ப் தரப்பு வாதிட்டு வருகிறது.
மேலும், அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும் குடியரசுக் கட்சி சார்பில் கூறப்படுகிறது. ஆனால், முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், டிரம்புடன் இணைந்து 2024 தேர்தலில் களம் காணலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த விவகாரத்தில் இருந்து நுட்பமாக விலகிக் கொண்டார் என்றே தெரிய வந்துள்ளது.
@AFP
மட்டுமின்றி, ஜனாதிபதி ஜோ பைடன் இந்த விவகாரத்தில் எந்த முன் அனுமதியும் வழங்கவில்லை என்றே வெள்ளைமாளிகை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.