புயலின் நடுவே தீப்பிடித்த கார்... தப்ப முயன்றபோது மின்சாரம் தாக்கிய சோகம்: அழகிய இளம்பெண்ணை விடாமல் துரத்திய விதி?
கடந்த வார இறுதியில் ப்ளோரிடாவை புயல் ஒன்று துவம்சம் செய்த நிலையில், மரம் ஒன்று விழுந்ததில் மின்சார வயர் ஒன்று நடுவழியில் அறுந்து தொங்கிக்கொண்டிருந்திருக்கிறது.
அப்போது அவ்வழியே காரில் வந்த Valentina Tomashosky (17) என்ற இளம்பெண்ணின் கார், அந்த வயர் மீது மோதியுள்ளது. மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த வயரில் மோதியதில் கார் தீப்பிடிக்க, காரிலிருந்து இறங்கித் தப்ப முயன்றுள்ளார் Valentina.
ஆனால், அவர் கால் வைத்த இடத்தில் அறுந்த அந்த மின்சார வயர் கிடப்பதைக் கவனிக்காமல் அவர் அதை மிதித்துவிட, அங்கேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார் Valentina. அப்போது, பொதுமக்களில் ஒருவர் Valentinaவைக் காப்பாற்றுவதற்காக காரைத் தொட முயல, அவரும் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
புயலுக்குத் தப்பி காரில் சென்ற Valentina, கார் தீப்பிடித்ததும், நெருப்புக்கு தப்ப காரிலிருந்து கீழிறங்க, அங்கே காத்திருந்த மின்சாரம் அவரைக் காவுகொண்டதைப் பார்த்தால், விதி அவரை விடாமல் துரத்தியதோ என எண்ணத்தோன்றுகிரது.
பொலிசார் அங்கு விரைந்து வந்தும், மின்சாரம் பாய்ந்தவண்ணம் இருந்ததால், அவர்களால் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்துள்ளது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள், அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தபின்னரே, அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரே அறுந்து விழுந்த வயர், முறிந்து விழுந்த மரம் என அனைத்தையும் அகற்ற முடிந்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.