பிரித்தானியாவுக்கு கொரோனாவை விட பெரிய பிரச்சினை காத்திருக்கிறது: வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்
பிரித்தானியாவில் இந்த குளிர்காலத்தில் கோவிட் -19ஐ விட சளிக்காய்ச்சல் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடும் என்று அரசாங்கத்தின் மூத்த தடுப்பூசி ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இந்த இலையுதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுடன் காய்ச்சல் (flu) தடுப்பூசிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் அந்தோனி ஹார்ண்டன் (Anthony Harnden) தெரிவித்தார்.
"இந்த குளிர்காலத்தில் கோவிட்டை விட காய்ச்சல் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கக்கூடும் என்பதை நான் வலியுறுத்துவேன்" என்று பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் ஹார்ண்டன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "கடந்த சில ஆண்டுகளாக காய்ச்சல் மிக மிகக் குறைந்துள்ளது, குறிப்பாக ஊரடங்கின் போது முற்றிலுமாக இல்லை.
காய்ச்சல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்டால், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வீழ்ச்சி அடையும் என்பதை நாங்கள் அறிவோம். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த குளிர்காலத்தில் காய்ச்சல் மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.
இதற்கிடையில், நடைமுறையில் இந்த குளிர்காலத்தில் கோவிட் -19 தடக்குப்பூசி வழங்கும் அதே நேரத்தில், காய்ச்சலுக்கான தடுப்பூசியும் வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.