எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று தெரியுமா? மீறி சாப்பிட்டால் தொல்லை தான்
உணவு பொருட்கள் பசியை தீர்ப்பதுடன் மனிதனின் உடல் ஆரோகியத்தையும் தீர்மானிக்கிறது. தவறான உணவு சேர்க்கைகளால் உடல்நல பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
எந்த உணவுப்பொருளுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தர்பூசணி மற்றும் பால்
தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும்.
பப்பாளி மற்றும் தண்ணீர்
பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.
முட்டை மற்றும் பால்
இந்த உணவுச் சேர்க்கை உடல் எடையை அதிகரிக்கும் என்று எடையை அதிகரிக்க நினைக்கும் பலர் இதை சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.
வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.
பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்
ஓட்ஸை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும் நொதிகளை ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் அழித்துவிடும். மேலும் ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் பாலை திரிக்கச் செய்து, உடலில் சளி தேக்கத்தை அதிகரிக்கும்.