இரவில் சாப்பாடு சாப்பிடுவீங்களா? அதனால் உடலில் என்ன மாற்றம் வரும் தெரியுமா?
ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.
தயிர்
சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாவதற்கு தயிர் உதவும். ஆனால் இரவில் அதனை உட்கொள்ளக்கூடாது. தயிருக்கு பதிலாக இரவில் மோர் அருந்தலாம். ஏனெனில் தயிர் உடலில் கபம் சார்ந்த பிரச்சினையை அதிகரிக்கும்.
பால்
இரவில் பால் பருகும் பழக்கம் இருந்தால், குறைந்த கொழுப்புள்ள பாலைத்தான் உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் குளிர்ந்த பாலை உட்கொள்ளக்கூடாது. சூடான பாலை பருகுவதுதான் சிறந்தது. ஏனெனில் சூடான பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால்தான் எளிதில் ஜீரணமாகும். இரவில் வெறுமனே பால் பருகுவதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
மசாலா பொருட்கள்
உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் அனைத்தும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆரோக்கியமான மசாலாப் பொருள்களை தேர்வுசெய்தால், அது உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவும். பசி உணர்வையும் சீராக பராமரிக்கும். அவற்றை இரவு உணவிலும் பயன்படுத்தலாம். ஆனால் காரமான மசாலா பொருட்களை இரவில் சாப்பிடக்கூடாது.
சாப்பாடு
இரவில் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். மேலும் குறைவான அளவே சாப்பிட வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் இரவில் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கும். பொதுவாக இரவில் செரிமான அமைப்பின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும். அந்த சமயத்தில் அதிகமாக சாப்பிடுவது, ஜீரணமாவதற்கு கடினமாகிவிடும்.