எல்லாருக்கும் பிடிச்ச இந்த சுவையான உணவை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா?
உடல் ஆரோக்கியத்தை நாம் சாப்பிடும் உணவுகள் தான் முடிவு செய்கிறது.!
சில உணவு பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படியான ஒரு உணவு தான் பூசணிக்காய். பூசணிகாய் அனைவருக்கும் பிடித்தமான காய்கறி. சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய பூசணி விதைகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.
இருப்பினும், பூசணி விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கு மேல் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் சில பக்க விளைவுகள் ஏற்படும்.
பூசணியை தேவையான அளவை விட அதிகமாக சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அரிக்கும் தோலழற்சி முதல் தலைவலி, தொண்டை எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பூசணி விதைகள் மிகவும் ருசியானவை. ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வது தேவையற்ற எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
இந்த விதைகள் குறைந்த இரத்த அழுத்தம் உள்ள சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
உணவுப்பொருட்களை சரியான அளவில் நன்கு மென்று சாப்பிட்டால் மட்டுமே அதன் முழுப் பலனை பெறலாம். அந்த வகையில் பூசணி விதைகளை நீங்கள் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடலில் ஏற்கனவே இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.