தப்பி தவறி கூட இந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீங்க.. பல பிரச்சினையை சந்திக்க நேரிடும்
Indigestion
throat pain
Blood suger
By Kishanthini
பொதுவாக ஒரு சில உணவுகளை சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றும்.
ஆனால் அப்படி குடித்தால் அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- fruit salad என்று சொல்லக் கூடிய பழக் கலவைகளை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
- சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தண்ணீரை உடனே குடிக்கவே கூடாது. அவ்வாறு குடிப்பதால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலியை உண்டாக்கும். எனவே உடனே தண்ணீர் குடிக்காமல் அரை மணி நேரம் கழித்து குடிப்பது நல்லது.
- நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் மறுநாள் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, சளி போன்ற உபாதைகளை அனுபவிக்கக் கூடும். எனவே ஐஸ்கிரீன் சாப்பிட்டு 15 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
- டீ குடித்துவிட்டும் சிலர் உடனே தண்ணீர் குடிப்பார்கள். இதுவும் தவறான செயலாகும். ஏனெனில் சூடான டீயை குடித்துவிட்டு உடனே குளிர்ச்சியாக இருக்கும் தண்ணீரை குடித்தால் வயிற்று கோளாறுகளை சந்திக்க நேரும்.
- இனிப்பு வகைகள், டெசர்ட் வகைகள் மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவு வகைகளான டோனட், கேக் போன்ற பேக்கரி உணவுகளை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடித்தால் தண்ணீர் சர்க்கரையை உடனே உறிஞ்சிவிடும். இதனால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடும்.
- பால் குடித்துவிட்டு உடனே தண்ணீர் குடிப்பது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கக் கூடும். அதோடு அசிடிட்டி மற்றும் அஜீரணக் கோளாறு உண்டாகும்.
- தர்பூசணி சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் , வயிற்று மந்தம், வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கக் கூடும்.
- கொய்யா பழம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் அருந்தக் கூடாது. ஏனெனில் கொய்யா விதைகளோடு நாம் சாப்பிடுவதால் உடனே தண்ணீர் குடிப்பது விதைகள் செரிமானிக்க தாமதமாகும். இதனால் அஜீரணம், வாயுத்தொல்லை, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
- வேர்க்கடலை, பட்டாணி, உப்புக்கடலை அல்லது எந்த வகை கடலை அல்லது வறுத்த கொட்டை வகைகளை சாப்பிட்டாலும் உடனே தண்ணீர் குடிக்காதீர்கள் . அவ்வாறு குடித்தால் வயிற்று வலி, வயிறு உப்பசம் உண்டாகும்.
- உணவு சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதே இடையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை தாமதப்படுத்தும். இதனால் வயிற்று மந்தம், நெஞ்சு எரிச்சல், வாயுப் பிரச்சனை போன்றவற்றை அனுபவிப்பீர்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US