ராக்கெட் வேகத்தில் விலைவாசி உயர்வு: பிரித்தானியாவில் பரிதவிக்கும் ஒற்றைப் பெற்றோர்கள்
பிரித்தானியாவில் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக ஒற்றைப் பெற்றோர்கள் நாளுக்கு ஒருவேளை உணவை தவிர்க்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒருவேளை உணவை தவிர்க்கும்
ஒற்றை பெற்றோரில் மூன்றில் ஒரு பங்கு பேர்கள் பெரும்பாலும் ஒருவேளை உணவை தவிர்ப்பதாகவும், அல்லது உணவு வங்கிகளின் உதவியை நாடுவதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
@iviblog
மட்டுமின்றி, தம்பதிகளாக வாழும் பெற்றோர்களில் ஏழில் ஒருவர் இவ்வாறு விலைவாசி உயர்வு காரணமாக உணவை தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியா மொத்தமும் பெரும்பாலான குடும்பங்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒற்றைப் பெற்றோர்களே அவதிப்படுவதாகவும் முக்கிய நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் குறைந்த கட்டணங்களில் தங்கள் உணவுத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையிலான உணவு பண்டங்களை பல்பொருள் அங்காடிகள் பெருவாரியாக அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
உணவு வங்கியை நாடியதாக
1977க்கு பின்னர் உணவு விலை உயர்வானது அக்டோபர் மாதம் 16.4% என பதிவாகியிருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் பால், வெண்ணெய், சீஸ், பாஸ்தா மற்றும் முட்டையின் விலை பெருமளவு அதிகரித்ததே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
Photograph: Stephen Barnes
ஒற்றைப் பெற்றோரில் 10 பேரில் ஒருவர் கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் உணவு வங்கியை நாடியதாகவும், அல்லது உணவை தவிர்க்க நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
விலைவாசி உயர்வு காரணமாக முதியவர்களும் ஒற்றைப் பெற்றோர்களும், அவர்களின் வருவாயில் பெரும்பகுதியை உணவு, மின்சாரம் மற்றும் எரிபொருளுக்காக செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.