கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்கள் கட்டாயம் அந்த உணவுகளை சாப்பிடுங்க...
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதே சமயம் அதிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் சமமான அளவில் வளர்ந்து வருகிறது.
இருப்பினும் கொரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்து வருபவர்கள் கடுமையான பலவீனம் மற்றும் சோம்பல் அறிகுறிகளை அனுபவித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகின்றது.
இதைத் தவிர்க்க வேண்டுமானால், உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒரு சில உணவுகளை பரிந்துரைக்கின்றனர். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- காலையில் எழுந்ததும் ஊற வைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சை சாப்பிட வேண்டும். நட்ஸ்களை ஊற வைதது சாப்பிடும் போது, அது மெல்லுவதற்கு எளிதாக இருப்பதோடு, உடலால் எளிதில் உடைத்தெறிய வசதியாக இருக்கும். மேலும் பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதால், அது லிபேஸ் என்னும் நொதியை வெளியிடச் செய்து, கொழுப்புக்களை எளிதில் ஜீரணிக்க உதவும்.
- காலை உணவின் போது ராகி தோசையை உட்கொள்வது, பலவீனமான செரிமான மண்டலத்தை கையாள உதவியாக இருக்கும். ராகி கஞ்சியை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும். அதோடு இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும்.
- மதிய உணவிற்கு பின் வெல்லம் மற்றும் நெய் சாப்பிட வேண்டும். ஏனெனில் வெல்லம் மற்றும் நெய் இரண்டும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக செய்யும். அதோடு இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வலுவாக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின் கே சத்து அதிகமாக உள்ளது.
- இரவு உணவாக கிச்சடி சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் இது ஒரு முழுமையான புரோட்டீன் நிறைந்த உணவு இதனை செய்யும் போது, அத்துடன் காய்கறிகளை சேர்த்து செய்தால், உடலுக்கு வேண்டிய நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் கிடைக்கும்.
-
போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதோடு மட்டுமின்றி, சர்பத், மோர் போன்ற பானங்களையும் குடிக்க வேண்டும். இவை உடலில் நீர்ச்சத்தின் அளவை சமநிலையில் பராமரிக்க உதவுவதோடு, கோடையில் செரிமான செயல்பாடு மென்மையாக நடைபெற உதவி புரியும்