இந்த சுவையான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் செல்களை அதிகரிக்கும்! உஷார் மக்களே
பொதுவாக புற்றுநோய் என்பது மிகுந்த சிக்கலான நோய்! இதில் பல வகை கேன்சர்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. எல்லா வகை கேன்சர்களும் எப்படி ஏற்படுகின்றன என்பதற்கான முழுமையான பதில்கள் நமக்கு தெரியாது. ஆனால் கேன்சரின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கும் என்பது நிபுணர்களின் விளக்கமாக இருக்கிறது.
மரபணு காரணிகள் முக்கிய பங்கு வகித்தாலும் வாழ்க்கை முறை பழக்கம், உணவுமுறை பழக்கம் உள்ளிட்ட வெளி காரணிகளும் சமயங்களில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
எனவே புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படாமல் இருக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
இறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்டவற்றை ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவது எவ்வளவு முக்கியமானதோ, அதை விட முக்கியம் அவற்றை சரியான முறையில் சாப்பிடுவது. எடை அதிகரிப்பு முதல் கேன்சர் வரை பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்த கூடியது பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள். புகை மற்றும் உப்பை சேர்த்து பதப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்பட்டு விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது ஒருவருக்கு பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
வறுத்த உணவு
கேன்சர் செல்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றொரு ஆபத்தான உணவு பழக்கம் அதிகமாக வறுத்த உணவுகளை சாப்பிடுவது. உருளைக்கிழங்கு அல்லது இறைச்சி போன்ற உணவுகளை அதிக சூட்டில் வறுத்து சமைக்கும் போது அதில் acrylamide என்ற கலவை உருவாகிறது. இந்த கலவை கேன்சர் பண்புகளை கொண்டது மற்றும் டிஎன்ஏ-வை சேதப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிக பால் பொருட்கள்
பால், சீஸ், தயிர் போன்றவற்றை மிதமிஞ்சி சாப்பிடுவது புரோஸ்டேட் கேன்சர் உயிரணுக்களின் பெருக்கம் அல்லது உற்பத்தியை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்
மாவு, சர்க்கரை, எண்ணெய் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் கேன்சர் செல்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நலம்.