மறந்தும் கூட இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. ஆபத்தை ஏற்படுத்துமாம்!
allergies
Colds
coughs
By Kishanthini
நாம் தினமும் பல வகையான உணவு வகைகளை சாப்பிடுகிறோம். எந்த காய் அல்லது உணவு வகையுடன் எதைச் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், ஒரு சில உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக் கூடாது.
அப்படிச் செய்தால், உங்கள் செரிமான உறுப்புகள் பாதிக்கப்பட்டு, தீவிரமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். ஏனெனில் நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த வெவ்வேறு குணங்கள் கொண்ட உணவுகளை ஒன்றாக சாப்பிடும் போது, அது சத்துக்களை வழங்குவதற்கு பதிலாக, தீங்கு விளைவிக்கும் உணவாக மாறுகிறது.
தற்போது நாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடகூடாத உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.
- பால் மற்றும் மீன் உணவுகளை எப்போதுமே சேர்த்து சாப்பிடக் கூடாது. பால் என்பது குளிர்ச்சியூட்டும் உணவுப்பொருள், ஆனால் மீன் வெப்பமூட்டும் தன்மைக் கொண்டது. இந்த இரண்டு உணவையும் சேர்த்து உண்பது ரத்த சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.
- புளிப்புச் சுவையுடைய பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, கிவி, உள்ளிட்ட பழங்கள் மற்றும் வாழைப்பழத்தை எப்போதுமே பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
- பால், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றை பழங்களோடு சேர்த்து சாப்பிடும் போது சளி, இருமல், மற்றும் அலர்ஜி ஏற்படலாம். அது மட்டுமின்றி, செரிமானம் ஆகாமல் இந்த உணவுகள் உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கி விடும்.
- தேனை எப்போதுமே சூடு படுத்தக்கூடாது. பல்வேறு குணமாக்கும் பண்புகள் கொண்ட தேனில் இருக்கும் என்சைம்கள், தேனை சூடுபடுத்தும்போது அழிந்து விடும். சத்துக்கள் நீங்குவது மட்டுமின்றி, சூடான தேன் உடலில் Ama எனப்படும் நச்சுக்களை உருவாக்கி, செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- தேன் மற்றும் நெய், இரண்டு பொருட்களுக்குமே மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. இரண்டையுமே சேர்க்கிறீர்கள் என்றால், சம அளவில் சேர்க்கக் கூடாது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US