சர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த 5 உணவுகளை சாப்பிடவே கூடாதாம்! மீறினால் இந்த பிரச்சினையை ஏற்படுத்தும்
Diabetes
foods
By Kishanthini
இன்றைய காலத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பலரும் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு வருவர்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க பலரும் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு ஒரு முக்கிய காரணம் உணவு முறையே. சில உணவுகளை சாப்பிடமால் இருப்பது நல்லது. தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அதிலும் சிலர் டயட்டில் இருப்பர், உடற்பயிற்சியில் ஈடுபடுவர். அப்படி இருந்தும், என்னதான் செய்தாலும் சர்க்கரை நோய் உங்களின் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருக்கும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். இந்த அரிசியில் வெறும் மாவுச்சத்து மட்டுமே இருக்கும். பாலிஷ் செய்யப்படும் போது அதில் உள்ள நார்ச்சத்துகள் போய்விடும்.
- வடை, சமோசா, பக்கோடா போன்ற உணவுகள் பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உங்களின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும்.
- சர்க்கரை நோயாளிகள் எந்த சிறுதானியமாக இருந்தாலும் அதனை கஞ்சி வடிவில் எடுத்துக் கொண்டால் அது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். அதனை வேறுவடிவில் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை அளவைக் குறைக்க முடியும்.
- செயற்கையாக தயாரிக்கப்பட்ட பானங்களில் உள்ள சர்க்கரை உங்களின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி விடும். அதேபோல், பழச்சாறுகளும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல. ஏனெனில், பழங்களில் உள்ள நார்ச்சத்துகள் பழச்சாறுகளில் இருக்காது. அதனால் இவையும் சர்க்கரை அளவை உயர்த்தும்.
- மைதா தான் அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் உள்ள ஒரு பொருளாகும். இதனை உணவாக எடுத்துக் கொள்வது உங்களின் இரத்தச் சர்க்கரை அளவைக் அதிகரித்து விடக்கூடும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US