மறந்தும் கூட பழங்கள் சாப்பிடும்போது இந்த உணவுகள் எடுத்து கொள்ளாதீங்க! உடலுக்கு தீங்கை ஏற்படுத்துமாம்
Headache
Kidney Disease
Constipation
By Kishanthini
பொதுவாக ஒரு சில உணவுகளை சில குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது.
அப்படி எடுத்து கொள்ளும் சமயத்தில் செரிமானக் கோளாறு ஏற்படும். வேறு சில உடல நலப் பிரச்சினைகளும் உண்டாகும்.
குறிப்பாக சில பழங்களுடன் சில உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது. இது உடலுக்குத் தீங்கை விளைவித்துவிடும்.
அப்படி எந்தெந்த பழங்கள் சாப்பிடும்போது வேறு என்ன உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க.
- கேரட் ஜூஸில் எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு கலந்து குடிக்க கூடாது. இப்படி எடுத்து கொள்ளும்போது உடல் சூடு அதிகரித்து ஹீட் பர்ன் உண்டாக்குவது, சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படுத்துவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
- பப்பாளி பழத்துடன் எலுமிச்சை சாறை சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இது ஹீமோகுளோபின் சமநிலையை ஏற்படுத்துவதால் அனீமியா என்னும் ரத்த சோகையை உண்டாக்கக் காரணமாகி விடும்.
- வாழைப்பழத்துடன் கொய்யாப் பழத்தை சேர்க்கக் கூடாது. கொய்யா மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும். அதனால் குமட்டல், வாயுத் தொல்லை, தலைவலி ஆகியவை உண்டாகும்.
- பழங்கள் சாப்பிடும்போது அவற்றுடன் சேர்த்து காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இவை வயிற்றில் நச்சுக்கள் உருவாகின்றன. இதன் காரணமாக வயிற்றுப் போக்கு, தலைவலி, வயிற்று வலி ஆகியவை உண்டாகும்.
- ஆரஞ்சு பழத்துடன் பாலை சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது அது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும். எனவே இவற்றை தவிர்த்துவிடுங்கள்.
- எப்போதும் அன்னாசி பழம் சாப்பிடும்போது அதோடு பால் சேர்த்து மில்க் ஷேக்காகவோ அல்லது தனியே பாலாகவோ அல்லது மற்ற பால் பொருள்களுடனோ சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. இது வயிற்று வலி, வாயுத்தொல்லை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US