இந்த உணவுகளை சமைக்காமல் சாப்பிடுறீங்களா? இனிமே அந்த தவறை செய்யாதீங்க
பச்சையாக உட்கொள்ளகூடாத சில உணவுகள் உள்ளன. அதன்படி அந்த உணவுகளை வேகவைத்து, சமைத்து, பொறித்து தான் சாப்பிட வேண்டும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை பச்சையாக உண்ணுவதால் வாய்வு பிரச்சனை உண்டாகிறது. செரிமான கோளாறு, தலைவலி, குமட்டல், போன்றவை உண்டாகின்றன. இதற்கு காரணம், பச்சை உருளைகிழங்கில் இருக்கும் சொலனின் என்னும் நச்சுப்பொருள்.
பால்
பாலை காய்ச்சி பருகி வருவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். பச்சை பாலைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். காய்ச்சாத பசும்பாலில், நுண் கிருமிகள், ஈ கோலி , சல்மோனெல்லா போன்றவை இருக்கும். இவை மனித உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய கேடுகளை உண்டாக்குகிறது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு உணவு. ஆனால், இதனை பச்சையாக் உண்ணுவதால், இதில் இருக்கும் அதிகமான சர்க்கரைச் சத்து , செரிமான பிரச்னையை உண்டாக்குகிறது.
காளான்
மஷ்ரூம் எனப்படும் காளான் பலராலும் விரும்பி சுவைக்கப்படும் உணவாக உள்ளது. சமைத்து உண்ணும்போது பாதுகாப்பானதாக இருக்கும் காளான், பச்சையாக உண்ணும்போது பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. காளான் என்பது ஒரு பூஞ்சை வகை என்பதால் இவற்றில் நுண் கிருமிகள் அதிகமாக இருக்கும்.
பன்றி இறைச்சி
சில மக்கள் பன்றி இறைச்சி அல்லது வேறு இறைச்சியை சாலடில் சேர்த்து பச்சையாக உண்ணுவர். இந்த பழக்கம் முற்றிலும் ஆபத்தானது. பன்றி இறைச்சி பச்சையாக இருக்கும்போது அதில் நாடாப் புழுக்கள் இருக்கும். இந்த வகை புழு, மனித உடலுக்கு பல தீங்குகளை உண்டாக்கும். புட் பாய்சன் அல்லது ஆபத்தான பல்வேறு சிக்கல்கள் சில சமயம் இறப்பையும் இவை உண்டாக்கலாம்.