திடீரென உடைந்து விழுந்த தரைப்பாலம்! பண்டிகை கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்
ஜம்மு காஷ்மீரில் கோவில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட மேம்பாலம் சரிந்து விழுந்ததில், 35 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பைசாகி பண்டிகை கொண்டாட்டம்
ஜம்மு காஷ்மீரில் கோவில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட தரைப்பாலம் இடிந்து விழுந்ததில், 35 பேர் காயமடைந்ததாக உதம்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
@ani
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பைசாகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஓடையின் மீதுள்ள தரைப்பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் செனானி தொகுதியின் பெயின் கிராமத்தில் உள்ள பெனி சங்கம் என்ற இடத்தில் நடந்துள்ளது.
உடைந்து விழுந்த பாலம்
இதுகுறித்து உதம்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் கூறியதாவது
'பைசாகி பண்டிகையின் போது, ஓடையில் கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்' என கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
@ani
சம்பவம் நடந்த உடனேயே, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும், உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
#WATCH | J&K: A footbridge collapsed during the Baisakhi celebration at Beni Sangam in Bain village in Udhampur's Chenani Block
— ANI (@ANI) April 14, 2023
Six people were injured during the incident. A rescue operation is underway. Police and other teams have reached the site: Dr Vinod, SSP Udhampur… pic.twitter.com/2jGn1QxLpX
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பைசாகி பண்டிகையின் போது, நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.