AI சரியாக வேலை செய்வதில்லை - மீண்டும் மனிதர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனம்
AI மனிதர்கள் அளவிற்கு துல்லியமாக வேலை செய்வதில்லை என நிறுவனம் 350 பொறியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
மனிதர்கள் அளவிற்கு வேலை செய்யாத AI
கணினியில் நிரல் எழுதுவது தொடங்கி நிறுவனத்தில் ஊழியர்கள் செய்யும் பல்வேறு வேலைகளை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு செய்து வருகிறது.

இதனால் பல பெரு நிறுவனங்களில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு AIயில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன.
தற்போது ஐடி துறையில் AI காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ள சூழலில், எதிர்காலத்தில் பல துறைகளிலும் இதன் காரணமாக வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
அதேவேளையில், AI மனிதர்கள் அளவிற்கு துல்லியமாக வேலை செய்வதில்லை என பிரபல நிறுவனம் ஒன்று மீண்டும் மனிதர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Ford, தனது செலவுகளை குறைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் கார் உற்பத்தி செயல்முறையில் AI பயன்பாட்டை அதிகரித்தது.

ஆனால், வாகனத்தின் உயர் தரத்தை உறுதி செய்வதற்கு தேவையான நுணுக்கமான மனித அனுபவம், செயற்கை நுண்ணறிவில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்த நிறுவனம் 350 அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |