ஜேர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலால் பரபரப்பு
ஜேர்மனியில், நச்சுப்பொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சயனைடு போன்ற நச்சுப்பொருட்கள் மூலம் தாக்குதல்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, துனிசியா நாட்டவரான ஒருவரையும், அவரது மனைவியையும் பொலிசார் கைதுசெய்தார்கள்.
அவர்கள் ricin என்னும் ரசாயனப்பொருள் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்ததையடுத்து அந்த ஆணுக்கு 10 ஆண்டுகளும், அந்த பெண்ணுக்கு 8 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
@AP
தற்போது கிடைத்த தகவல்
இம்முறை சயனைடு மற்றும் ricin போன்ற ரசாயனங்களைக் கொண்டு அதேபோன்றதொரு தாக்குதலை சிலர் நடத்த இருப்பதாக அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, ஈரான் நாட்டவரான 32 வயது நபர் ஒருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Castrop-Rauxel என்ற ஜேர்மன் நகரில் இந்த பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
@7aktuell.de, Marc Gruber/dpa via AP
@AP