ஜேர்மன் விமான நிலையங்களில் நிலவும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு உதவ இருக்கும் வெளிநாட்டவர்கள்
ஜேர்மன் விமான நிலையங்களில் நிலவும் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வெளிநாட்டவர்களை பணிக்கமர்த்த ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
இந்த மாதத்தில்தானே சுமார் 250 வெளிநாட்டுப் பணியாளர்கள் விமான நிலையங்களில் பணிக்கமர்த்தப்பட இருப்பதாக ஜேர்மன் விமான நிலைய ஊழியர்கள் கூட்டமைப்பு ஒன்றின் தலைவரான Thomas Richter என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணிக்கமர்த்துதல் தற்போது விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிச்சுமையை எளிதாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo: picture alliance/dpa | Boris Roessler
கோவிட் காலகட்டத்தின்போது செலவீனங்களை மிச்சம் பிடிப்பதற்காக விமான நிலையங்கள் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு மற்றும் பயணிகளின் உடைமைகளைக் கையாளும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. அதன் காரணமாக இந்த கோடையின்போது கடும் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டது.
தற்போது அந்த ஊழியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஜேர்மனி எடுக்கும் இந்த நடவடிக்கை, ஜேர்மன் விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் காரணமாக நிலவும் குழப்பங்களைத் தீர்க்க உதவுவதுடன், மூன்றாம் நாடுகள் என்று அழைக்கப்படும் வெளிநாடுகளிலுள்ள பணியாளர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.