மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மேலும் ஒரு முக்கிய நபர் விலகல்!
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
முன்னதாக நடந்து முடிந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் 133 இடங்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 2.45 விழுக்காடு வாக்குகளே பெற்றது.
இது 2019-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு விழுக்காட்டை விட 1.26 விழுக்காடு குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகளை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த மக்கள் நீதி மய்யத்தில் துணை தலைவர் ஆர்.மகேந்திரன், கட்சியிலிருந்து விலகினார்.
அத்துடன் பல முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில் தங்களது பதவியை ராஜினாமா செய்தவதாக தலைமையிடம் கடிதம் அளித்தனர்.
அதுதொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
Dear friends, Good afternoon! It’s with a heavy heart that I am informing you that I am resigning my post and membership from Makkal Needhi Maiam. My decision is due to personal reasons. I thank Kamal Sir and our team for their affection and friendship.
— Dr. Santhosh Babu IAS (@SanthoshBabuIAS) May 13, 2021
2020 ஆகஸ்ட் மாதம் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த சந்தோஷ் பாவு, 2020 டிசம்பர் மாதம் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.
இணைந்த உடனயே சந்தோஷ் பாபுவுக்கு கட்சி பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.