மேட்ச் பிக்சிங் செய்ய 40 லட்சம் தருவதாக கூறினார்! முன்னாள் KKR வீரர் பரபரப்பு புகார்
மேட்ச் பிக்சிங் செய்ய தனக்கு 40 லட்சம் தருவதாக நபர் ஒருவர் தன்னை அணுகியதாக கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷ் பெங்களூரு பொலிசில் புகார் அளித்துள்ளார்.
40 வயதான சதீஷ், ரஞ்சி டிராபியில் தமிழ்நாட்டிற்காக விளையாடியுள்ளார் மற்றும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.
இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக சதீஷ் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், மேட்ச் பிக்சிங் செய்ய 40 லட்சம் தருவதாக இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவர் தன்னை அணுகியதாக சதீஷ் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
சதீஷ் அளித்துள்ள புகாரில், ஜனவரி 3ம் திகதி அன்று இன்ஸ்டாகிராமில் பன்னி ஆனந்த் என்ற நபர் என்னை தொடர்புக்கொண்டார்.
மேட்ச் பிக்சிங் செய்ய தனக்கு 40 லட்சம் தருவதாக கோரினார், மேலும் ஏற்கனவே இரண்டு வீரர்கள் இதற்கு ஒத்துக்கொண்டதாக மெசேஜ் செய்தார் என சதீஷ் புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் படி, TNPL தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ய சதீஷ்க்கு பணம் தர முயன்றதாக பொலிசார் நம்புகின்றனர்.
சதீஷ், இது குறித்து பிசிசிஐ-யை அணுகியுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, பெங்களூருவில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.