குழந்தைகளால் தொல்லை? பிரான்ஸ் அறிமுகம் செய்யும் மசோதா
சில நாடுகளில் குழந்தைகள் இல்லாமல் பெற்றோரும் குடும்பங்களும் சந்திக்கும் வேதனைகளும் அவமானங்களும் ஒரு பக்கம் இருக்க, குழந்தைகளால் தொல்லை என சில பிரெஞ்சு உணவகங்கள் குழந்தைகளுக்கு தடை விதித்துள்ளன.
இந்நிலையில், குழந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விடயம், பிரான்ஸ் அரசு வரை எட்டியுள்ளது.
பிரான்ஸ் அறிமுகம் செய்யும் மசோதா
பிரான்ஸ் நாட்டிலுள்ள உணவகங்கள் முதலான சில இடங்களில், குழந்தைகளால் தொல்லை ஏற்படும் என்பதற்காக, குழந்தைகளுடன் வருவோருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், செனேட்டரான லாரன்ஸ் (Laurence Rossignol) என்பவர், அப்படிப்பட்ட உணவகங்கள் முதலான இடங்களில் குழந்தைகளுக்கு தடை விதிப்பது சட்டவிரோதம் எனக்கூறும் மசோதா ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
குழந்தைகள் தொல்லை அல்ல என்று கூறும் லாரன்ஸ், ஒரு தரப்பினர் குழந்தைகளை சகித்துக்கொள்ளமுடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ளார்.
சிறுவர்களுக்கான உயர் ஆணையரான சாரா (Sarah El Hairy) கூறும்போது, இப்படி குழந்தைகளை தடை செய்வது அவர்களுடைய உரிமைகளை மீறும் செயலாகும் என்றும், அது அவர்களுடைய பெற்றோருக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் சமூகத்திலும் பிரிவினைகளை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |