அதிகரிக்கும் அச்சுறுத்தல்... பில்லியன் டொலர் செலலில் அணு ஆயுத தளம் ஒன்றை புதுப்பிக்கும் பிரான்ஸ்
ஐரோப்பாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், விமான தளம் ஒன்றை அணு ஆயுத குண்டுவீச்சு விமானங்களைக் கையாளும் வகையில் பிரான்ஸ் அரசாங்கம் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளது.
இரண்டு மடங்கு பெரியதாக
நாட்டின் கிழக்கில் தொலைதூர மலைகளில் அமைந்துள்ள இந்த விமான தளம் தற்போது 1.7 பில்லியன் டொலர் செலவில் புதுப்பிக்க உள்ளனர்.
ஆனால் இந்தப் பணி பத்தாண்டுகளில் முடிக்க உள்ளதாகவும், 2035 முதல் லக்ஸுயில்-செயிண்ட் சாவியர் தளம் தற்போது இருப்பதை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தளமானது பிரான்சின் 50 ரஃபேல் போர் விமானங்களால் சுமந்து செல்லக்கூடிய புதிய தலைமுறை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சேமிக்க பயன்படுத்தப்படும்.
மார்ச் மாதம் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் இந்த புதுப்பித்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. லக்ஸுயில் அணு ஆயுதங்களை சேமித்து வைக்கும் திறன் கொண்ட பிரான்சின் நான்காவது மற்றும் மிகவும் நவீன தளமாக மாறும்.
குறித்த தளத்தில் தற்போது Mirage-2000 போர் விமானங்கள் 20 எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரஃபேல் போர் விமானங்களை தற்போதைய நிலையில் இந்த தளத்தில் தரையிறக்க முடியாது என்றே கூறுகின்றனர்.
ரஃபேல் விமான வருகைக்காக
மட்டுமின்றி, ரஃபேல் விமானம் மிராஜை விட கனமானது, எனவே லக்ஸூயிலின் ஓடுபாதையை நீளமாகவும் கடினமாகவும் மாற்ற வேண்டியிருக்கும். அணு ஆயுதங்கள் சேமிக்கும் தளம் என்றால், அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
முக்கிய பணிகள் மற்றும் முதல் ரஃபேல் விமானங்களின் வருகைக்காக லக்ஸூயில் 2029 மற்றும் 2032 க்கு இடையில் மூடப்படும். புதிய தளம் முழுமையாக செயல்படும் நேரத்தில், தற்போது தளத்தில் உள்ள 300 தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை 1,000 ஆக விரிவடையும்.
லக்ஸூயில் தளமானது ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஐரோப்பாவின் பிற பகுதிகளில் பதட்டங்களை அதிகரிக்க செய்துள்ளதாக ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரெஞ்சு அணு ஆயுதம் ஏந்திய போர் விமானங்களை களமிறக்குவது குறித்து மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் விவாதிக்க பிரான்ஸ் தயாராக உள்ளது என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேக்ரானின் இந்த கருத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பிய கண்டத்தில் அணு ஆயுதங்களின் பெருக்கம் ஐரோப்பிய கண்டத்திற்கு பாதுகாப்பை வலுப்படுத்தாது என்றே ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov பதிலளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |