பிரான்ஸூக்கு தடை.. CNIL அதிரடி! வெளியான முக்கிய அறிவிப்பு
எல்லையில் புலம்பெயர்ந்தோரை கண்டுபிடிக்க கண்காணிப்பு டிரோன்களைப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரோன்களைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்தோரின் தனியுரிமையை பிரான்ஸ் அரசாங்கம் மீறியிருக்கலாம் என பிரான்சின் தகவல் மற்றும் சுதந்திரத்திற்கான தேசிய ஆணையம் (CNIL) தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கும் பிற நோக்கங்களுக்காகவும் பிரான்ஸ் அரசாங்கம் சட்டவிரோதமாக டிரோன்களைப் பயன்படுத்துவதாக CNIL கண்டறிந்துள்ளது.
மே மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்துறை கண்காணிப்பு டிரோன்களைப் பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்சின் வடக்கிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் நீண்ட காலமாக பிரட்டனுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகின்றனர்.
இங்கிலீஷ் சேனல் வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்த டவுனிங் ஸ்ட்ரீட்டின் முயற்சியால் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் நவம்பர் 2020-ல் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
எல்லையில் டிரோன்கள், ரேடார், ஆப்ட்ரானிக் தொலைநோக்கிகள் மற்றும் கமெராக்களைப் பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா உள்துறை செயலாளர் பிரிதி படேல் மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் ஆகியோர் ஒப்புக் கொண்டனர்.
பிரித்தானியாவுடனான ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் எல்லையில் டிரோன்களைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்தோரை கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.