புலம்பெயர்வோரைத் தடுக்க கடலுக்குள் இறங்கும் பிரெஞ்சு பொலிசார்: பிரான்சிலேயே எதிர்ப்பு
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் புலம்பெயர்வோரை பிரான்ஸ் பொலிசார் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டு கலவரத் தடுப்பு பொலிசார், புலம்பெயர்வோரை தடுக்க லத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரேயுடன் கடலுக்குள் இறங்கும் காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில், இப்படி புலம்பெயர்வோரைத் தடுக்க பிரெஞ்சு பொலிசார் கடலுக்குள் இறங்குவதற்கு பிரான்சிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
நீதிமன்றம் செல்ல முடிவு
புலம்பெயர்வோரைத் தடுக்க பிரெஞ்சு பொலிசார் கடலுக்குள் இறங்குவதால், புலம்பெயர்வோர் பொலிசாரிடமிருந்து தப்பிக்கவும், அவர்களைத் தாக்கவும் முயல்வார்கள்.
கடலுக்குள் கைகலப்பு ஏற்படலாம். அதனால் உயிரிழப்புகள் அதிகமாகும் என பிரான்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
Utopia 56 என்னும் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆர்தர் (Arthur Dos Santos) என்பவர், புலம்பெயர்வோரைத் தடுக்க பிரெஞ்சு பொலிசார் கடலுக்குள் இறங்குவதால், அவர்கள் எவ்வகையிலாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்தாகவேண்டும் என்பதற்காக, ஏதாவது முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்கிறார்.
ஆகவே, பிரெஞ்சு பொலிசாரின் கடலுக்குள் இறங்கும் திட்டத்தை தடுப்பதற்காக ஐரோப்பிய நீதிமன்றங்களை அணுகுவது குறித்து பரிசீலித்துவருவதாக ஆர்தர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |