பிரான்ஸிற்கு பிரித்தானியா அமுல்படுத்த உள்ள புதிய விதி! கசிந்த முக்கிய தகவல்
அடுத்த வாரம் பிரித்தானியாவின் அம்பர் பட்டியலில் பிரான்ஸ் சேர்க்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அப்படி பிரான்ஸ் அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், பிரான்ஸிலிருந்து பிரித்தானியா திரும்பும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
கடந்த வாரம் பிரித்தானியா அரசாங்கம் அம்பர் பிளஸ் என்ற புது பிரிவு ஒன்றை உருவாக்கியது.
இந்த பட்டியலில் இடம்பெறும் நாடுகளிலிருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகள், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும்.
தென் ஆப்பரிக்காவில் தோன்றிய பீட்டா மாறுபாடு பிரான்ஸில் அதிகளவில் உள்ளது என்ற அச்சத்தில், பிரான்ஸை அம்பர் பிளஸ் பட்டியலில் சேர்த்தது பிரித்தனியா.
பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் பீட்டா மாறுபாடு அதிகம் இருந்தபோதிலும் ஸ்பெயினை அம்பர் பட்டியலிலே வைத்திருந்ததே அதற்கு காரணம்.
இந்நிலையில், பீட்டா மாறுபாடு குறித்தும், தடுப்பூசி அதற்கு எதிராக சற்றே குறைவான செயல்திறன் மிக்கதாக இருப்பதை பற்றியும் தான் கவலையடைந்துள்ளதாக பிரித்தானியாவின் சுற்றுச்சழல் செயலாளர் George Eustice தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த விகிதங்கள் குறைந்து வருவதால் பயண கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படலாம், பிரான்ஸ் போன்ற நாடுகளை மீண்டும் அம்பர் பட்டியலில் சேர்க்க நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
தொற்றுகள் அதிகரித்தாலும் ஸ்பெயின் மற்றும் கிரீஸ் அம்பர் பிளஸ் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என பிரித்தானியா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.