பிரான்ஸ் பாடசாலைகளுக்கு பொலிஸ் நியமனம்!
பிரான்சில் பாடசாலைகளில் பைகளை சோதனை செய்ய பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர்.
பிரான்சில் பாடசாலைகளில் ஆயுதங்கள் மற்றும் கத்தியைக் கொண்டுசெல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பொலிஸார் எதிர்பாராத பை சோதனைகளை நடத்தும் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் வரும் வசந்த காலத்திலிருந்து (ஏப்ரல்) தொடங்கும் என்று கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் அறிவித்துள்ளார்.
பாடசாலை அதிகாரிகள் அல்லது ஆசிரியர்கள் மாணவர்களின் பைகளை சோதிக்க அனுமதி இல்லை, எனவே இந்த நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்வார்கள்.
பாடசாலை வளாகத்திலும் சுற்றுவட்டாரத்திலும் பொலிஸார் மாணவர்களின் பைகளை சோதித்து, எவராவது ஆயுதங்களை எடுத்துவருகிறார்களா என்பதை கண்காணிப்பார்கள்.
மேலும், மாணவர் ஒருவரிடம் கத்தி போன்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தண்டனைக்குழுவின் முன் நிறுத்தப்படுவார், மேலும் சட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது, இது பாடசாலை தலைமை ஆசிரியரின் விருப்பத்திற்கேற்ப நடைபெறுகிறது. ஆனால் புதிய விதிகளின்படி எந்தவொரு விதிவிலக்கும் இல்லை.
சமீபத்தில், பாரிசின் பன்யே பகுதியில் 17 வயது மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கடுமையாக காயமடைந்தார்.
மேலும், பிரதான குற்றச் செயல்கள் நடைபெறும் சென்-செயின்ட்-டெனிஸ் பகுதியில் 20 பள்ளிகளில் 100 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France, France to deploy police at schools for bag searches