மனைவி பெயரில் பிரான்ஸ் முன்னாள் பிரதமர் செய்த மோசடி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
மனைவி பெயரில் மோசடி செய்த பிரான்ஸ் முன்னாள் பிரதமருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவி பெயரில் மோசடி
பிரான்சின் முன்னாள் பிரதமரான ஃப்ராங்கோயிஸ் ஃபில்லோன் (François Fillon, 71), தனது மனைவியான பெனலோபிக்கு (Penelope Fillon) நாடாளுமன்ற உதவியாளர் என்னும் பணியை வழங்கியிருந்தார்.
ஆனால், பெனலோபி நாடாளுமன்றத்தில் எந்த பணியும் செய்யவில்லை. என்றாலும், மக்கள் வரிப்பணத்திலிருந்து அவருக்கு பல மில்லியன் யூரோக்கள் ஊதியம் வழங்கப்பட்டது.
மோசடி மூலம் பணம் பார்த்த ஃபில்லோனுக்கு, 2022ஆம் ஆண்டு, ஓராண்டு சிறைத்தண்டனையும், 375,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
தனது தண்டனையை எதிர்த்து ஃபில்லோன் Court of Cassation என்னும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடயம் என்னவென்றால், முந்தைய தீர்ப்பின்படி அவர் ஒரு ஆண்டாவது சிறையில் செலவிட்டிருக்கவேண்டும். இப்போதைய தண்டனையோ, suspended prison sentence என்னும் முறையிலான தண்டனை.
அதாவது, நான்கு ஆண்டுகளுக்கு ஃபில்லோன் மீண்டும் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே அவர் சிறையிலடைக்கப்பட்டுவார். அதுவரை அவர் சுதந்திரமாக வெளியில் நடமாடலாம்.
ஃபில்லோனின் மனைவியாகிய பெனலோபிக்கு இரண்டு ஆண்டுகள் suspended prison sentence என்னும் முறையிலான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரும் 375,000 யூரோக்கள் அபராதம் செலுத்தவேண்டும்.
ஃபில்லோனின் மனைவியாகிய பெனலோபி, ஒரு பிரித்தானியக் குடிமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |