பிரான்சில் நினைத்தை விட தீவிரமாகும் அபாயம்! சுகாதார அமைச்சர் வெளியிட்ட பீதியை கிளப்பும் புள்ளி விவரம்
பிரான்சில் நினைத்ததை விட கொரோனாவின் நான்காவது அலை தீவிரமாக பரவிவருவது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன நாடுகளில் புதிய கொரோனா பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் இறப்பு அதிகமாகி வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் சுகாதார அமைச்சர், Olivier Véran, கடந்த திங்கட் கிழமை மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி எண்ணிக்கை 18000-ஆக பதிவாகியுள்ளது.
இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, 150 சதவீதம் அதிகம் ஆகும். இந்த அளவிற்கு கொரோனா தீவிரம் இருக்கும் என்பதை நாங்கள் நினைத்து கூட பார்த்ததில்லை. எதிர்பார்த்ததை விட தற்போது பரவும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது.
குறிப்பாக இந்த டெல்டா வைரஸ் இளைஞர்களிடையே அதிகமாக பரவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதுமட்டுமின்றி பிரான்சில் பீட்ட வகை கொரோனா வைரஸ் பரவலும் தீவிரமாகி வருகிறது.
நேற்று முன் தினம் தான், கொரோனாவின் நான்காவது அலைக்குள் நுழைந்திருப்பதாக அரசு சார்பில் எச்சரிக்கப்பட்ட நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது,