சுட்டெரிக்கும் வெப்ப அலை: கடந்த 7 நாட்களில் மட்டும் பிரான்ஸில் 2025 பேர் உயிரிழப்பு
வாட்டி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்சில் ஒரு வாரத்தில் மட்டும் 2025 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுட்டெரிக்கும் வெப்ப அலை
பிரான்சில் நிலவிவரும் கடுமையான வெப்ப அலை காரணமாக ஜூன் 22ம் திகதி முதல் 28ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 2025 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அத்துறையின் அமைச்சர் ஸ்டெஃபானி ரிஸ்ட் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது இறப்பு சான்றிதழ்களை வைத்து மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு இருப்பதால், உயிரிழப்புகள் எண்ணிக்கை இதை விடவும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாரிஸ் நகரில் மட்டும் கிட்டத்தட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62% உயர்ந்துள்ளது.
வெப்ப அலை காரணமாக பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் ஜூன் மாத இறுதியில் மட்டும் மொத்தமாக 3,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 530 பேர் 85 வயது உடையவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் கடைசி வாரத்தில் பதிவான வெப்பம் ஐரோப்பிய வரலாற்றிலேயே இதுவரை மிகவும் மோசமாக பதிவான வெப்பம் ஆகும்.
அதிகமான வெப்பம் காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு மற்றும் சுகாதார அமைப்புகளில் சீர்குலைவு ஆகியவை ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |