இளம்பெண்ணை சீரழித்த மர்ம நபர்கள்: ஆதாரங்களை சேமித்துவைத்த தாய்
பிரான்சில், முகமூடி அணிந்த சிலர் இளம்பெண் ஒருவரை சீரழித்த நிலையில், அவரது தாய் ஆதாரங்களை பத்திரமாக சேமித்துவைத்ததால் அவர்கள் தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
இளம்பெண்ணை சீரழித்த மர்ம நபர்கள்
மேற்கு பிரான்சில் வாழ்ந்துவந்த இளம்பெண்ணொருவர், 2020ஆம் ஆண்டு பாரீஸுக்கு வந்துள்ளார்.
அப்போது அவரது நண்பர்கள் அவரை அறை ஒன்றில் தனியாக கைவிட்டுச் செல்ல, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் எட்டு பேர் அவரை தாக்கி வன்புணர்ந்துள்ளனர்.

தன்னை சிலர் தாக்க, சிலர் சீரழிக்க, மற்றவர்கள் அதைப் பார்த்து சத்தமாக சிரித்துக்கொண்டிருந்ததாகவும், ஒருவன் தன்னை கழுத்தில் அடிக்க, தான் சுயநினைவிழந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நடுக்கத்துடன் வீடு திரும்பிய அந்த இளம்பெண், தன் தாயிடம் கண்ணீருடன் தனக்கு நடந்த அநியாயம் குறித்துக் கூறியதுடன், பொலிசாரிடம் செல்லத் தான் தயாராக இல்லை என்றும் கூற, மகளுக்கு ஆறுதல் கூறிய தாய், சமயோகிதமாக ஒரு விடயத்தைச் செய்துள்ளார்.
ஆம், தன் மகளின் உடைகளில் குற்றவாளிகளின் DNA இருக்கும் என்பதை உணர்ந்த அந்தத் தாய், மகளுடைய லெக்கிங்ஸ் மற்றும் உள்ளாடைகளை பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு பத்திரமாக சேமித்துவைத்துள்ளார்.
2021ஆம் ஆண்டு அந்த இளம்பெண் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக, அவரது தாய் தான் சேமித்து வைத்திருந்த ஆதாரங்களை விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
அந்த இளம்பெண்ணின் உடைகளிலிருந்த DNAவின் அடிப்படையில் நான்கு பேரைக் கைது செய்துள்ளார்கள் பொலிசார்.
அப்போது அவர்களில் இருவருக்கு 15 வயது மட்டுமே. ஆனால், இப்போது அவர்களுக்கு வயது வந்துவிட்டதால் அவர்களில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இன்னொருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்ற மூன்று பேர் மீதான விசாரணை விரைவில் துவங்க உள்ளது.
பிரான்சைப் பொருத்தவரை, வன்புணரப்படும் பெண்களில் 90சதவிகிதம் பேர் வரை வழக்குத் தொடர்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |