பிரான்சில் சுரங்கத்தில் தங்கியிருந்த ஏராளமான அகதிகள் வெளியேற்றம்! வெளியான தகவல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுரங்கத்தில் தங்கியிருந்த அகதிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 19-ஆம் வட்டாரத்தின் Sigmund-Freud சுரங்கத்தில் ஏராளமான அகதிகள் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை இந்த சுரங்கத்தில் தங்கியிருந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட அகதிகளை பொலிசார் மற்றும் அதிகார்கள் அவர்களை வெளியேற்றினர். வெளியேற்றிய அகதிகள் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இங்கிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள், இல் து பிரான்சில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.