புலம்பெயர்ந்தோரை தடுக்காமல் பிரான்ஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக எழுந்த புகார்: பிரான்ஸ் அதிரடி திட்டம்
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக சிறுபடகுகளில் பயணிக்கும் புலம்பெயர்வோரை பிரான்ஸ் அதிகாரிகள் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிகாரிகள் அதிரடி திட்டங்கள் சிலவற்றை முன்வைத்துள்ளார்கள்.
பிரான்ஸ் அதிரடி திட்டம்
அதாவது, தற்போதைய விதிகளின்படி, புலம்பெயர்வோர் கடலுக்குள் இறங்கும் முன்தான் பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களைத் தடுக்கமுடியும்.
அவர்கள் கடலுக்குள் இறங்கிவிட்டால் அவர்களை பிரான்ஸ் அதிகாரிகள் ஒன்றும் செய்யமுடியாது. ஒருவேளை புலம்பெயர்ந்தோர் படகுகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு புலம்பெயர்வோர் தண்ணீரில் தத்தளிப்பதுபோன்ற நிலை உருவானால் மட்டுமே பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களை காப்பாற்றி கரைக்குக் கொண்டுவரமுடியும்.
ஆனால், இனி புலம்பெயர்வோர் கடலுக்குள் இறங்கிய பிறகும் பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்த இருப்பதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரான்சுக்குள் இருக்கும் கால்வாய்களிலிருந்து பயணித்து, கடற்கரையில் காத்திருக்கும் புலம்பெயர்வோரை ஆங்கிலக்கால்வாய்க்குள் அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் டெக்சி படகுகளையும் தடுத்து நிறுத்த பிரான்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |