பிரான்சில் ஒருவாரத்திற்கு இதை செய்தாக வேண்டும்! கொரோனாவை தடுக்க பிரதமரின் அசத்தில் திட்டம்
பிரான்ஸ் பிரதமர் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்,, வாரம் ஒன்றுக்கு நான்கு மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனாவின் நான்காவது அலையில், பிரான்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா மற்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் என இரண்டுமே தீவிரமாக பரவி வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 50 மில்லியன் பேருக்கு அவர்களுக்கான முதலாவது தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார்.
இதனால், வரும் வாரத்தில் இருந்து, வாரம் ஒன்றுக்கு நான்கு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்னர், பிரதமர் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 40 மில்லியன் பேருக்கான தடுப்பூசி போடப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஜூலை மாத இறுதிக்குள் அந்த 40 மில்லியன் எனும் இலக்கை அடைந்துவிடுவோம் என பிரதமர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.