வெளிநாடு ஒன்றில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 51 பெண்களையும் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ள பிரான்ஸ்
சிரியாவிலுள்ள முகாம்களிலிருந்து 16 பெண்களையும் 35 குழந்தைகளையும் தாயகம் அழைத்து வந்துள்ளது பிரான்ஸ்.
இவர்கள் அனைவரும் ஜிகாதிகளின் குடும்பத்தார் என சந்தேகிக்கப்படுபவர்கள் ஆவர்.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பிரான்ஸ் இன்று 35 பிரெஞ்சு குடிமக்களான சிறுவர்களை வடகிழக்கு சிரியாவிலுள்ள முகாம்களிலிருந்து நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது.
அத்துடன், 16 தாய்மார்களும் அதே முகாம்களிலிருந்து அழைத்துவரப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுபிள்ளைகள் அரசின் சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அந்தப் பெண்களோ, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
Photo Credit: AP Photo/Maya Alleruzzo, File