பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது பறிப்பு
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட உயரிய விருதொன்று பறிக்கப்பட்டுள்ளது.
உயரிய விருது பறிப்பு
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.
சார்க்கோஸிக்கு வழங்கப்பட்ட Legion of Honour என்னும் பிரான்சின் உயரிய விருது தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அதற்கு இணையான தண்டனை பெற்றவர்கள், Legion of Honour விருதை வைத்திருக்கமுடியாது என்பது அவ்விருது தொடர்பிலான விதியாகும்.
சார்க்கோஸியைப் பொருத்தவரை, அவர் மூன்று வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
ஒன்று, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு.
இரண்டு, அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக, தேர்தல் பிரச்சாரத்துக்கு பணம் செலவிட்ட வழக்கு.
மூன்றாவது, 2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, நிக்கோலஸுக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான வழக்கு.
தற்போது, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்கில் சார்க்கோஸி குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட Legion of Honour என்னும் பிரான்சின் உயரிய விருது தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |