பிரான்ஸ் மேயர் தேர்தல்களில் வெளிநாடுகளின் குறுக்கீடு?
பிரான்சில் 34,875 மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்களில் வெளிநாடுகளின் குறுக்கீடு இருப்பதாக அரசு ஏஜன்சி ஒன்றும், பாதுகாப்பு அமைப்பு ஒன்றும் தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் தேர்தல்களில் வெளிநாடொன்றின் குறுக்கீடு?
பிரான்சிலுள்ள Marseille மற்றும் Toulouse நகரங்களுக்கான மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் வெளிநாடுகள் இறங்கியுள்ளதாக அந்த பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேயர் தேர்தலில் போட்டியிடும் Sebastien Delogu மற்றும் Francois Piquemal ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே குறிவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அப்படி மேயர் தேர்தலில் குறுக்கீடு செய்வோர் எந்த நாட்டைச் சேர்ந்தோர் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணை துவக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், Sebastien Delogu குறித்து பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக, அவரது புகாரின்பேரில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக Marseille நகர அரசு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தான் குறிவைக்கப்படுவதாக Sebastien Delogu தெரிவித்துள்ளார்.

அதேபோல, Francois Piquemalம், இந்த நாசவேலைகளில் ஈடுபடுவோர் குறித்து கண்டறியுமாறு நீதித்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இஸ்ரேல் வலதுசாரி குழுக்களால் தாங்கள் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |