ஜூலை 1ஆம் திகதி முதல்... பிரான்சில் பொது இடங்களில் இதைச் செய்ய தடை
பிரான்சில் பொது இடங்களில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.
ஜூலை 1ஆம் திகதி முதல்...
ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், சிறு பிள்ளைகள் அதிகம் நடமாடும் இடங்களான கடற்கரைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் முதலான பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான கேத்தரின் (Catherine Vautrin) தெரிவித்துளார்.
குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து புகையிலை காணாமல்போகவேண்டும் என்று கூறியுள்ள அவர், சிறுபிள்ளைகள் சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை எங்கே துவங்குகிறதோ, அங்கே புகை பிடிப்பதற்கான சுதந்திரம் முடிவடைகிறது என்றார்.
இந்த, புகை பிடிக்கத் தடை, ஜூலை மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வருகிறது. தடையை மீறுவோருக்கு 135 யூரோக்கள் (இலங்கை மதிப்பில் 45,607.05 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.