இலவச கொரோனா பரிசோதனைகளை முடிவுக்கு கொண்டு வரும் பிரான்ஸ்: பின்னணியிலுள்ள காரணம்
பிரான்ஸ், அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வாக்கில் இலவச கொரோனா பரிசோதனைகளை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
தடுப்பூசி திட்டத்தை முன்னிலைப்படுத்துவதற்காகவும், அதிக தொற்றும் தன்மையுடைய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய சூழல் உருவாகுவதைத் தடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தித்தொடர்பாளரான Gabriel Attal தெரிவித்துள்ளார்.
ஆகத்து 10 நிலவரப்படி, 67 மில்லியன் மக்களைக் கொண்ட பிரான்ஸ், தன் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கிவிட்டது.
45 மில்லியன் பேர், அதாவது பிரான்ஸ் மக்கள் தொகையில் 67.2 சதவிகிதம் பேர், தங்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுவிட்டார்கள்.
இதற்கிடையில், ஆகத்து முடிவுக்குள் 50 மில்லியன் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 35 மில்லியன் பேருக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் வழங்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த இலையுதிர்காலத்துக்குள் 90 சதவிகிதம் மக்களுக்கு தடுப்பூசி வழங்கி, அதனால் மக்களுக்கு மந்தை நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என எதிர்பார்க்கிறது பிரான்ஸ்.