பிரித்தானியா மீதான தடையை நீக்கிய பிரான்ஸ்
பிரித்தானியப் பயணிகளுக்கான பயண விதிகளை பிரான்ஸ் தளர்த்தியுள்ளது.
ஜனவரி 14, வெள்ளிக்கிழமை காலை முதல் பிரித்தானியாவிலிருந்து விடுமுறைக்கு வருபவர்கள் மீதான பயணத் தடையை பிரான்ஸ் நீக்கும் என்று அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் ஜீன்-பாப்டிஸ்ட் லெமோய்ன் (Jean-Baptiste Lemoyne) அறிவித்துள்ளார்.
நாட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் சோதனை எதிர்மறையானதற்கான ஆதாரம் பயணிகளுக்கு தேவைப்படும் என்றாலும், வருகையின் போது தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
Omicron வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பிரித்தானிய பயணிகள் மீது கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று பிரான்ஸ் கடந்த மாதம் அறிவித்தது.
அதனை மீறி அங்கிருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு "நிர்பந்தமான காரணம்" தேவை என்று கூறப்பட்டது.
இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான மக்களுக்கு கிறிஸ்துமஸ் திட்டங்களை சீர்குலைத்தது, அதே நேரத்தில் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இருப்பினும், இந்த Omicron மாறுபாடு இப்போது பிரான்சில் குறிப்பிடத்தக்க அளவில் பரவி, தொற்று எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
பிரான்சில் புதன்கிழமை ஒரே நாளில் புதிதாக 368,149 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது பெருந்தொரு தொடங்கியதிலிருந்து பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கயாகும்.
தடையை நீக்குவதை எதிர்பார்த்து பயணத்தை முன்பதிவு செய்யுமாறு பல சுற்றுலா நிறுவனங்கள் ஏற்கனவே பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.