பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் எப்போது கிடைக்கும்?- வெளியான தகவல்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அரசு பேருந்தில் பயணிக்க உரிமை வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், 2025-26 கல்வியாண்டுக்கான பஸ் பயண அட்டை தற்போது வரை வழங்கப்படவில்லை.
கடந்த கல்வியாண்டில் கொடுக்கப்பட்ட அட்டை வைத்தே மாணவர்கள் இலவச பயணம் மேற்கொண்டு வந்ததனர்.
அந்தவகையில், 2025-26 கல்வியாண்டுக்கான பயண அட்டை வழங்குவது தொடர்பாக சில முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.
இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கு புது பயண அட்டைகள் வழங்குவதற்கான தரவுகள் EMIS தொழில்நுட்ப வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தரவுகள் சரியாக உள்ளதா என்பதை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர்களும் சரிபார்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தற்போதைய வகுப்பில் பயிலும் நிலை, அவர்களின் சமீபத்திய புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக பதிவாகியுள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்க்கவும்.
மேலும், ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக மேற்கொண்டு, புதிய விவரங்களை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட மாணவர் விவரங்களை தொகுத்து, மாவட்ட வாரியாக அறிக்கைகள் தயார் செய்ய வேண்டும்.
இந்த விவரங்களை நேரடி மேற்பார்வைக்காக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இத்தகவல்களை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |