பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சினை: திடீர் கூட்டத்தை கூட்டிய பிரான்ஸ் அதிபர்!
இஸ்ரேலின் "பெகாஸஸ்" உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிரானவா்களை பிரான்ஸ் அரசு உளவு பாா்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இன்று அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் அந்த நாடுகளின் அரசுக்கு எதிரான 50,000-த்திற்கும் மேற்பட்டவா்களின் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன.
2019ல் நடைபெற்ற இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பிட்ட இந்த சாப்ட்வேர், அரசு கேட்டால் மட்டும்தான் வழங்கப்படுமே தவிர தனி நபர்களுக்கு தரப்படாது என்பதால், அரசு மீது குற்றச்சாட்டு எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெகாஸஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி, பிரான்ஸில் செய்தியாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், எதிா்க்கட்சியினா் ஆகியோரது மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மெக்ரான் செல்போனும் இதில் தப்பவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தீர்வைக் காண ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இன்று காலை திடீர் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டினார்.
அதிபர் மக்ரோன் பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து மிகவும் தீவிரமாக இருப்பதாகவும், தற்போது இது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளை கூர்ந்து கண்காணித்து வருவதாகவும், பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் கேபிரியேல் அட்டல் கூறியுள்ளார்.