இதெல்லாம் டூ மச்... பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் அமைச்சர் பதிலடி
முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானியா சொல்வதெல்லாம் டூ மச் என்று கூறியிருக்கிறார் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர்.
பிரான்சிலிருந்து பிரித்தானியா வருவோர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றிருந்தாலும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் அமைச்சரான Clement Beaune, முழுமையாக தடுப்பூசி பெற்றாலும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குச் செல்வோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறது என்றார்.
ஐரோப்பிய விவகாரங்கள் துறை அமைச்சரான Clement Beaune, எந்த பீட்டா வைரஸ் பரவல் குறித்த அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரித்தானியா கூறுகிறதோ, அந்த பீட்ட வைரஸ் இப்போது பிரான்சில் கட்டுக்குள் வந்துவிட்டது என்றார்.
பிரித்தானியா எடுத்துள்ள நடவடிக்கைகள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை அல்ல என்றார் Clement Beaune.. ஆனால், பிரான்சுக்கு சொந்தமான, கடல் கடந்த பிரதேசமான ரீயூனியன் தீவில் பீட்டா வைரஸ் பரவல் அதிகம் காணப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இ
ந்துமகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ரீயூனியன் தீவில், ஜூலை 3ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் இடையில் மட்டும் 1,450 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதில், 91 சதவிகிதம் பேர் பீட்டா மற்றும் காமா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், பிரான்சில் பீட்டா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் வெறும் 5 சதவிகிதத்தினர்தான். இருந்தாலும், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி, பீட்டா வைரஸுக்கு எதிராக திறம்பட செயல்படாததால்தான் தாங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளதாக பிரித்தானிய பிரதமரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் காட்டப்படும் தரவுகள் ரீயூனியன் தீவின் தொற்றுக்களை உள்ளடக்கியவை அல்ல என்று கூறியுள்ள அவர், பிரான்சில் மட்டுமே பீட்டா வைரஸ் 5 சதவிகிதம்பேருக்கு தொற்றுக்கு காரணமாக இருக்கும்பட்சத்தில், அது பிரித்தானியாவுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலேயே விரைவாக பிரித்தானியா இந்த முடிவை எடுத்துள்ளது என்றார்.