10 முறை சிறுபடகுகளை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் அதிகாரிகள்
பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என கூறப்படுவதில் உண்மையில்லை என எல்லை பாதுகாப்பு அதிகாரி விளக்கம்.
கடந்த சில வாரங்களாக பிரித்தானிய தரப்பிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியினரும், ரீஃபார்ம் கட்சியினரும், பிரான்ஸ் அதிகாரிகள் சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்துவருகிறார்கள்.
உண்மை இல்லை...
ஆனால், அவர்கள் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்கிறார் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அமைப்பின் சிறுபடகுகள் கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநரான சார்லி (Charlie Eastaugh).

இளவேனிற்காலத்துக்குப் பிறகு மட்டுமே, பிரான்ஸ் அதிகாரிகள், பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோரை 10 முறை தடுத்து நிறுத்தியுள்ளார்கள் என்கிறார் அவர்.
கடந்த சில வாரங்களாக ஆங்கிலக்கால்வாயில் நாம் கண்ட விடயங்கள், மக்களை சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து உணர்த்துகின்றன.
ஊடகங்களில் வெளியாகிவரும் புகைப்படங்களை வைத்து, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோரை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடக்கவில்லை என கூறுவது எளிது.
ஆனால், புலம்பெயர்ந்தோர் பிரித்தானியக் கரையை அடைவதற்கு முன், அவர்களை தடுத்து நிறுத்த பிரான்ஸ் அதிகாரிகள் எப்படி அயராது உழைக்கிறார்கள் என்பது தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும் என்கிறார் சார்லி.
பிரான்ஸ் அதிகாரிகள், புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகளின்போது ஆயுதங்களுடன் வரும் வன்முறையாளர்களை எதிர்கொள்வது, பெரும் கூட்டத்தை கலைப்பது, கடத்தல்காரர்களைக் கைது செய்வது, ஆயுதங்களை பறிமுதல் செய்வது, எங்கள் வழக்குகளுக்கு உதவும் ஆதாரங்களைத் திரட்டுவது என பல விடயங்களைச் செய்கிறார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை அவர்கள் எதிர்கொள்ளும் முன்பும், பிரான்ஸ் பொலிசாரின் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை உள்ள அனைத்து பிரிவினரும் அதற்காக திட்டமிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தும்போது, அதாவது, எரிச்சலிலிருக்கும் மக்களையும், ஆபத்தான ஆட்கடத்தல் கும்பல்களையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் தங்கள் அதிகாரிகளின் பதுகாப்பையும், மக்களுடைய பாதுகாப்பையும் சம அளவில் உறுதி செய்யவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார் சார்லி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |