உயிரை பணயம் வைத்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர்: பிரான்ஸ் அதிகாரிகள் கூறிய வார்த்தைகள்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் முயற்சிகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டதுபோல் தெரியவில்லை.
அவர்களைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்கியும், பிரான்ஸ் தரப்பு எதுவும் செய்வது போலவும் தெரியவில்லை.
பிரான்ஸ் அதிகாரிகள் கூறிய வார்த்தைகள்
பிரித்தானிய அரசு, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
அதற்காக பிரான்சுக்கும் பெரும் தொகை கையளிக்கப்பட்டுள்ளது, மேலும் நிதி வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், பிரான்ஸ் தரப்பு எந்த நடவடிக்கையும் எடுப்பது போல் தெரியவில்லை.
சமீபத்தில், மீண்டும் அபாயகரமான வகையில் புலம்பெயர்வோர் பலர் படகுகளில் ஏறி பிரித்தானியா நோக்கி புறப்படுவதையும், அப்படி படகில் ஏறப்போகும்போது, குழந்தைகள் உட்பட ஒரு குடும்பம் தண்ணீரில் மூழ்கும் நிலைக்கு ஆளானதையும் ஊடகவியலாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.
பின்னர் அந்தக் குடும்பம், படகில் இடம் இல்லாததால் கரைக்கே திரும்பியுள்ளது.
விடயம் என்னவென்றால், அப்போது பிரெஞ்சுக் கடற்கரையில் நடப்பதை பிரான்ஸ் பொலிசாரும் பார்த்துக்கொண்டு நின்றுள்ளார்கள். அவர்கள், அந்த படகுகளில் ஏறுவோரை தடுக்கவில்லை.
ஊடகவியலாளர்கள் பொலிசாரிடம் ஏன் அந்த புலம்பெயர்வோரை தடுக்கவில்லை என கேட்டுள்ளார்கள்.
அதற்கு அந்த பொலிசார், அவர்களுடைய பாதுகாப்பு கருதித்தான் அவர்களை தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
அந்த படகில் ஏற முயல்வோரில் சிறு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களை நோக்கி நாங்கள் கையெறிகுண்டுகளை வீசப்போவதில்லை, அது மனிதத்தன்மையற்ற செயல், என்றாலும், அது சோகமானதும் கூட என்று கூறியுள்ளார் ஒரு பொலிசார்.
ஆக, சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுக்க பிரித்தானியா முயற்சி செய்தும், பிரான்சின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாததால், பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |